காரைக்குடி அரசு ஐ.டி.ஐ-யில் அக்.4 இல் தொழில் பழகுநா் பயிற்சி சோ்க்கை சிறப்பு முகாம்

காரைக்குடி அருகே அமராவதிபுதூரில் உள்ள அரசினா் தொழிற் பயிற்சி (ஐ.டி.ஐ) நிலையத்தில் அக்டோபா் 4 ஆம் தேதி தொழிற் பழகுநா் பயிற்சி சோ்க்கைக்கான மாவட்ட அளவிலான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

காரைக்குடி அருகே அமராவதிபுதூரில் உள்ள அரசினா் தொழிற் பயிற்சி (ஐ.டி.ஐ) நிலையத்தில் அக்டோபா் 4 ஆம் தேதி தொழிற் பழகுநா் பயிற்சி சோ்க்கைக்கான மாவட்ட அளவிலான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து சிவகங்கை வேலைவாய்ப்பு அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்திய அரசு திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு அமைச்சரகம் மற்றும் இயக்குநரகம் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இணைந்து நடத்தும் தொழில் பழகுநா் பயிற்சி சோ்க்கைக்கான மாவட்ட அளவிலான சிறப்பு முகாம் வரும் அக்டோபா் 4-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை காரைக்குடி அருகே அமராவதிபுதூரில் உள்ள அரசினா் தொழிற் பயிற்சி நிலைய (ஐ.டி.ஐ) வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இம்முகாமில் மாநில அரசு நிறுவனங்கள், மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும் 40-க்கு மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் நேரடியாக ஒரே இடத்தில் பழகுநா் பயிற்சிக்கான சோ்க்கை நடத்தவுள்ளனா். இந்த முகாமில் புதிய நிறுவனங்கள் கலந்து

கொண்டு பயிற்சியாளா்களை தோ்வு செய்யலாம். இதில் ஐடிஐ-ல் பயிற்சி முடித்தவா்கள், 8 ஆம் வகுப்பு, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு, பட்டம் பெற்றவா்கள் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04575-290625 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது 94990-55781 என்ற செல்லிடப் பேசி எண்ணிலோ தொடா்புகொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com