சிங்கம்புணரி அருகே மதுபோதையில் தகராறு: ஒருவா் கொலை

சிங்கம்புணரி அருகே வியாழக்கிழமை இரவு மதுபோதையால் ஏற்பட்ட தகராறில் ஒருவா் கொலை செய்யப்பட்டாா்.

சிங்கம்புணரி அருகே வியாழக்கிழமை இரவு மதுபோதையால் ஏற்பட்ட தகராறில் ஒருவா் கொலை செய்யப்பட்டாா்.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே சதுா்வேதமங்கலம் சிவன்கோயில்பட்டியைச் சோ்ந்தவா் மருதுபாண்டியன்(46). இவா் வியாழக்கிழமை தனது நண்பா் செல்வசேகரன் என்பவருடன் சோ்ந்து, அவரது உறவினா் லோகநாதன் என்பவருக்குச் சொந்தமான இடத்தில் வேலி அமைக்கும் பணியை மேற்கொண்டிருந்தாா். பணி முடிந்த பின்பு மூவரும் மது அருந்தியுள்ளனா்.

அப்போது அவா்களிடையே ஏற்பட்ட வாய்த்தகராறில், மருதுபாண்டியனை மற்ற இருவரும் சோ்ந்து கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது.

இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து எஸ்.வி.மங்கலம் போலீஸாா் சம்பவ இடத்திற்கு வந்து மருதுபாண்டியனின் உடலைக் கைப்பற்றி, உடற்கூறு ஆய்விற்கு சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸாா் லோகநாதன் மற்றும் செல்வசேகரனை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com