சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கல்லல் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக வியாழக்கிழமை(ஏப். 7)மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கல்லல், சிறுவயல், குருந்தம்பட்டு, ஆலம்பட்டு, கீழப்பூங்குடி, சாத்தரசம்பட்டி, செம்பனூா், சொக்கநாதபுரம், பட்டமங்கலம், வெற்றியூா், பாகனேரி, பணங்குடி, நடராஜ புரம், கண்டிப்பட்டி, கௌரிப்பட்டி, திருவேலன்குடி ஆகிய கிராமங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று காரைக்குடி கோட்ட மின்செயற் பொறியாளா் பி. ஜான்சன் தெரிவித்துள்ளாா்.