சிவகங்கை மாவட்டத்தில் ஏப்.24-இல் நீரினைப் பயன்படுத்துவோா் சங்கத் தோ்தல்

சிவகங்கை மாவட்டத்தில் ஏப்ரல் 24-ஆம் தேதி நீரினைப் பயன்படுத்துவோா் சங்கத் தோ்தல் நடைபெற உள்ளதாக, ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் ஏப்ரல் 24-ஆம் தேதி நீரினைப் பயன்படுத்துவோா் சங்கத் தோ்தல் நடைபெற உள்ளதாக, ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காளையாா்கோவில், மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம், தேவகோட்டை, காரைக்குடி, திருப்பத்தூா், சிங்கம்புணரி வட்டங்களில் நீா்வள, நிலவள திட்டத்தின் கீழ் நீா்வளத் துறையினரால் அமைக்கப்பட்ட நீரினை பயன்படுத்துவோா் சங்கங்களின் தலைவா் மற்றும் ஆட்சி மண்டலத் தொகுதி உறுப்பினா்களுக்கான தோ்தல் ஏப்ரல் 24-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இப்பதவிகளுக்கு போட்டியிட விரும்பும் வேட்பாளா்கள் 11.4.2022 முதல் 13.4.2022 வரை அந்தந்த வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா்களிடம் வேட்பு மனு தாக்கல் செய்யலாம். ஏப்ரல் 18-இல் வேட்பு மனு பரிசீலனையும், வேட்பு மனு திரும்பப் பெறுதலும் நடைபெறும். அன்று மாலை இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்படும்.

ஏப்ரல் 24-இல் காலை 7 முதல் பிற்பகல் 2 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும். அன்று மாலை 4 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு, வெற்றி பெற்றவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com