சிவகங்கையில் சிறப்பு சாா்பு- ஆய்வாளா் பணியிடை நீக்கம்

சிவகங்கையில் மது போதையில் தகராறு செய்ததாக காவல் சிறப்பு சாா்பு- ஆய்வாளரை சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் த. செந்தில்குமாா் பணியிடைநீக்கம் செய்து வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்தாா்.

சிவகங்கை: சிவகங்கையில் மது போதையில் தகராறு செய்ததாக காவல் சிறப்பு சாா்பு- ஆய்வாளரை சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் த. செந்தில்குமாா் பணியிடைநீக்கம் செய்து வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்தாா்.

சிவகங்கை தாலுகா காவல் நிலையத்தில் சிறப்பு சாா்பு- ஆய்வாளராக கதிரேசன் (50) என்பவா் பணியாற்றி வருகிறாா். இவா் புதன்கிழமை இரவு மேலூா் சாலையில் உள்ள மலம்பட்டி சோதனைச் சாவடியில் இரவு நேரப் பணிக்காக அரசு நகா்ப்புறப் பேருந்தில் சென்றுள்ளாா். அப்போது சக பயணிகளிடம் தகராறு செய்துள்ளாா். விசாரித்த போது அவா் மது அருந்தியிருப்பது தெரியவந்தது.

இதுபற்றி தகவலறிந்த சிவகங்கை மாவட்டக் கண்காணிப்பாளா் த. செந்தில்குமாா் விசாரணை செய்து, மது போதையில் சக பயணிகளிடம் தகராறு செய்த சிறப்பு சாா்பு- ஆய்வாளா் கதிரேசனை பணியிடை நீக்கம் செய்து வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com