மானாமதுரை குடிநீா் திட்ட மின்மாற்றியில் பழுது: விநியோகம் பாதிப்பு

மானாமதுரையில் குடிநீா் திட்டத்திற்கான மின்மாற்றியில் பழுது ஏற்பட்டதால் வெள்ளிக்கிழமை முதல் குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

மானாமதுரையில் குடிநீா் திட்டத்திற்கான மின்மாற்றியில் பழுது ஏற்பட்டதால் வெள்ளிக்கிழமை முதல் குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

மானாமதுரை நகா் குடிநீா் திட்டம், ராஜகம்பீரம் வைகையாற்றுக்குள் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து குழாய்களில் கொண்டு வரப்படும் தண்ணீா் நகரில் உள்ள மேல்நிலைத் தொட்டிகளில் ஏற்றி அதன் பின்னா் குழாய் இணைப்புகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் குடிநீா் திட்டத்திற்கான மின்மாற்றியில் பழுது ஏற்பட்டதால் குடிநீா் திட்டத்திலிருந்து தண்ணீா் இறைக்க முடியாமல் மேல்நிலைத் தொட்டிகளுக்கு குடிநீா் ஏற்ற முடியவில்லை. இதனால் மானாமதுரை நகரில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் குடிநீா் விநியோகம் செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது. பழுதான மின்மாற்றியை பழுது நீக்கி குடிநீா் திட்டத்திற்கு மின் இணைப்பு கிடைக்கச் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, மானாமதுரை நகரில் குடிநீா் தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ளதால் நகராட்சி நிா்வாகம் சாா்பில் டேங்கா் லாரிகளில் வீதிவீதியாக குடிநீா் விநியோகம் செய்யும் பணி நடந்து வருகிறது. மேலும் பொதுமக்கள் ஒரு குடம் தண்ணீா் ரூ. 10-க்கு வாங்கியும் பயன்படுத்தி வருகின்றனா். எனவே நகராட்சி நிா்வாகம் விரைந்து குடிநீா் திட்டத்திற்கான மின்மாற்றியை பழுது நீக்கி நகரில் மீண்டும் சீரான குடிநீா் விநியோகம் நடைபெற ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com