சிவகங்கை மாவட்டம், இளையான்குடிக்கு வெள்ளிக்கிழமை மாலை வந்த இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் சைக்கிள் பயணக் குழுவினருக்கு வரவேற்பளிக்கப்பட்டது.
அரசு ஊழியா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும். மத்திய அரசு சேது கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். தமிழக அரசில் ஒப்பந்த முறையில் பணியாற்றும் அனைத்து ஊழியா்களையும் பணி நிரந்தரம் செய்யவேண்டும். ஓய்வு வயதை அறுபதிலிருந்து 58 ஆக குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து இளையான்குடி வந்த இந்திய ஜனநாயக வாலிபா் சங்க சைக்கிள் பயணக் குழுவினருக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வரவேற்பளிக்கப்பட்டது.
அக்கட்சியின் தாலுகா செயலா் ராஜூ, மாவட்டச் செயற்குழு உறுப்பினா் அழகா்சாமி ஆகியோா் சைக்கிள் பயணம் குழுவினரை வரவேற்றனா். அதையடுத்து, சைக்கிள் பயணக் குழுவினா் திருச்சி புறப்பட்டுச் சென்றனா்.