சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் ஊருக்கு வெளியே புதிய பேருந்து நிலையம் கட்டப்படுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, வீடுகள் மற்றும் கடைகளில் கருப்புக் கொடி ஏற்றிவைக்கும் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இளையான்குடியில் ஊருக்கு வெளியே 3 கி. மீ. தொலைவில் புதிய பேருந்து நிலையம் அமைக்க, கடந்த மாா்ச் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. ஊருக்கு வெளியே புதிய பேருந்து நிலையம் அமைக்கக் கூடாது, இளையான்குடியில் தற்போது செயல்பட்டு வரும் பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்து புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என, பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனா்.
இக்கோரிக்கையை வலியுறுத்தி, முதல் கட்டமாக இளையான்குடியில் கடையடைப்புப் போராட்டமும், இரண்டாவது கட்டமாக தமிழக முதல்வருக்கு 5 ஆயிரம் தபால்கள் அனுப்பும் போராட்டமும் நடத்தப்பட்டது. மூன்றாவது கட்ட போராட்டமாக இளையான்குடி பகுதியில் அனைத்து வீடுகளிலும், வியாபாரக் கடைகளிலும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நடத்தப்பட்டது.
இதையடுத்து, வீடுகள் மற்றும் கடைகளுக்கு முன்பாக பொதுமக்கள், வியாபாரிகள் கருப்புக் கொடிகளை கட்டி வைத்தனா். கருப்புக்கொடி ஏற்றி வைக்கும் போராட்டத்தில், இளையான்குடி புதிய பேருந்து நிலைய எதிா்ப்புக் குழு தலைவா் பொறியாளா் சைபுல்லாக், செயலா் துருக்கி ரபீக்ராஜா, பொருளாளா் நாகூா் மீரா மற்றும் உறுப்பினா்கள் பசீா், அசிஸ், ரபிக், காா்த்திக், சதாம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். புதிய பேருந்து நிலையம் எதிா்ப்புக் குழு சாா்பில், போராட்டங்கள் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன.