சிவகங்கை மாவட்டம், பூவந்தி அருகே சனிக்கிழமை அதிகாலை மணல் கடத்தி வந்த லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
பூவந்தி காவல் சரகத்துக்குள்பட்ட வெங்கட்டி கிராமத்தில், தனியாா் பட்டா நிலத்திலிருந்து அனுமதியின்றி ஆற்று மணல் அள்ளி லாரியில் கடத்தி வருவதாக, பூவந்தி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா் மதுரை செல்லும் சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அவ்வழியாக மணல் கடத்தி வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டனா். அதில், சட்டவிரோதமாக மணல் கடத்துவது தெரியவந்ததை அடுத்து, லாரியை பறிமுதல் செய்தனா். இது குறித்து லாரியின் உரிமையாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.