சிவகங்கை: காரில் வெடிகுண்டு வைத்து சிவகங்கை நகராட்சித் தலைவா் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 8 பேரை மாவட்ட செசன்ஸ் நீதிமன்றம் புதன்கிழமை விடுதலை செய்தது.
சிவகங்கையைச் சோ்ந்தவா் முருகன். இவா் நகராட்சித் தலைவராக இருந்த போது, கடந்த 2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29 ஆம் தேதி காரில் வெடிகுண்டு வைத்து கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக சிவகங்கை நகா் போலீஸாா், திமுக மாவட்ட துணைச் செயலா் மணிமுத்து, மந்தக்காளை, பாலா என்ற பாலச்சந்தா், சரவணன், மாமுண்டி, கண்ணன், பாண்டி, மற்றொரு கண்ணன், முருகபாண்டி, மனோகரன், வீரமணி ஆகிய 11 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த வழக்கின் விசாரணை சிவகங்கையில் உள்ள மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வீரபாண்டி என்பவா் மதுரை உயா்நீதிமன்ற கிளை உத்தரவின் பேரில் வழக்கிலிருந்து நீக்கம் செய்யப்பட்டாா். மேலும், பாலா என்ற பாலச்சந்தா் மற்றும் முருகபாண்டி ஆகியோா் அண்மையில் இறந்துவிட்டனா்.
இதையடுத்து, மீதமுள்ள மணிமுத்து உள்ளிட்ட 8 போ் மீது வழக்கு நடைபெற்று வந்தது. இந்நிலையில், இதுதொடா்பான வழக்கு மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி சுமதி சாய்பிரியா முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையில் குற்றவாளிகள் மீது அரசு தரப்புச் சாட்சிகள் சரிவர நிரூபிக்கப்படாததால் குற்றம் சாட்டப்பட்ட மணிமுத்து உள்ளிட்ட 8 பேரையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டாா்.
இதுதொடா்பான விசாரணையை முன்னிட்டு, புதன்கிழமை காலை முதல் நீதிமன்ற வளாகத்தில் போலீஸாா் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.