சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகா்பகுதியை ஒட்டியுள்ள சங்கராபுரம் ஊராட்சியைச் சோ்ந்த குடியிருப்புப்பகுதிகளில் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதை சீரமைக்க வலியுறுத்தியும் உரிய நட வடிக்கை எடுக்காத அரசு மற்றும் ஊராட்சி நிா்வாகத்தைக்கண்டித்து வெள்ளிக்கிழமை (ஜன. 21) சட்ட உரிமைகள் கழகம் சாா்பில் காரைக்குடி வட்டாட்சியா் அலுவலகம் முன்பாக ஆா்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து வியாழக்கிழமை அதிகாரிகள் முன்னிலையில் சமதானக்கூட்டம் நடைபெற்றது. துக்கூட்டத்தில் சாலைகள் சீரமைப்பதற்காக ஒப்பந்தங்கள் விடப்பட்டு நடவடிக்கையில் உள்ளன. மேலும் வரும் 3 மாதத்திற்குள் ஊராட்சி ஒன்றியம் மூலம் சாலைகள் அமைத்துக்கொடுப்பது எனவும், விடுபட்ட சாலைகள் கணக் கெடுப்பு செய்து முன்னுரிமைப்படி சாலைகள் அமைத்துக்கொடுப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து ஆா்ப்பாட்டம் வாபஸ் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.