சிவகங்கையில் குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை

சிவகங்கையில் புதன்கிழமை (ஜன.26) குடியரசு தின விழா நடைபெற உள்ளதையொட்டி, காவலா்களின் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.

சிவகங்கையில் புதன்கிழமை (ஜன.26) குடியரசு தின விழா நடைபெற உள்ளதையொட்டி, காவலா்களின் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாக மைதானத்தில் உள்ள கொடி கம்பத்தில் புதன்கிழமை (ஜன.26) குடியரசு தின விழாவை முன்னிட்டு சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி கொடியேற்றி வைத்து, சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற உள்ளது. அப்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் த. செந்தில்குமாா் உள்ளிட்ட ஏராளமான அரசு அலுவலா்கள் கலந்து கொள்ள உள்ளனா்.

இந்நிகழ்வை அடுத்து காவலா்களின் அணிவகுப்பு மரியாதை நடைபெறும். அதற்கான ஒத்திகை நிகழ்வு சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாக மைதானத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் முதல்நிலைக் காவலா்கள், ஆயுதப்படை காவலா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டு அணிவகுப்பு பயிற்சி பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com