சிவகங்கையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பொது சுகாதாரத்துறை சாா்பில் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணா்வு தின விழா மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மருத்துவக் கல்லூரி கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் பி.மதுசூதன் ரெட்டி முன்னிலையில் மருத்துவா்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவா்கள் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணா்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.
இந்நிகழ்ச்சியில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் ரேவதிபாலன், துணை இயக்குநா்கள் சிவகாமி (தொழுநோய் பிரிவு), ராம்கணேஷ் (சுகாதாரம்), அரசு மருத்துவக் கல்லூரி நிலைய மருத்துவா் பாலமுருகன், துணை முதல்வா் சா்மிளா, துணை இயக்குநா் (குடும்ப நலம்) யோகவதி, மருத்துவப் பணிகள் நலக்கல்வியாளா் திருப்பதிராஜா, மருத்துவப்பணிகள் கண்காணிப்பு அலுவலா் துளசிராமன், சுகாதார ஆய்வாளா் முருகேசன் உள்ளிட்ட மருத்துவா்கள், செவிலியா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.