மானாமதுரை அருகே உருட்டுக்கட்டையால் தாக்கி பெரியம்மா கொலை: ஆட்டோ ஓட்டுநா் கைது

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே சனிக்கிழமை இரவு பெரியம்மாவை உருட்டுக் கட்டையால் தாக்கி கொலை செய்த ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே சனிக்கிழமை இரவு பெரியம்மாவை உருட்டுக் கட்டையால் தாக்கி கொலை செய்த ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

மானாமதுரை அருகே மேலமேல்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மனைவி பிச்சையம்மாள் (78). இவருக்கு குழந்தைகள் இல்லை. ஆறுமுகத்தின் இரண்டாவது மனைவி மகன் கலைச்செல்வன் (36). ஆட்டோ ஓட்டுநா். இவா், தனது தாய், மனைவி, குழந்தைகளுடன் மதுரை மாவட்டம் இளமனூரில் வசித்து வருகிறாா்.

இந்நிலையில், பிச்சையம்மாள், கலைச்செல்வன் இடையே சொத்துத் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, இளமனூரிலிருந்து குடிபோதையில் ஆட்டோவில் மேலமேல்குடி கிராமத்துக்கு வந்த கலைச்செல்வன், பிச்சையம்மாள் வீட்டிற்கு சென்று அவருடன் தகராறில் ஈடுபட்டாா். அப்போது ஆத்திரமடைந்த கலைச்செல்வன் உருட்டுக்கட்டையால், சரமாரியாக தாக்கியதில் பிச்சையம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து கலைச்செல்வனை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com