தை அமாவாசை: திருப்புவனம், மானாமதுரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

திருப்புவனம், மானாமதுரை பகுதிகளில் தை அமாவாசை நாளான இன்று ஏராளமானோர் தங்களது குடும்பத்தில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பண பூஜை வழிபாடு நடத்தி கோயில்களில் சுவாமி தரிசனம் செய்தனர். 
தை அமாவாசை தினத்தை முன்னிட்டு இளையான்குடி ஒன்றியம் குறிச்சி ஸ்ரீகாசி விஸ்வநாதர் கோயிலில் ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பண பூஜை வழிபாடு நடத்தினர்.
தை அமாவாசை தினத்தை முன்னிட்டு இளையான்குடி ஒன்றியம் குறிச்சி ஸ்ரீகாசி விஸ்வநாதர் கோயிலில் ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பண பூஜை வழிபாடு நடத்தினர்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம், மானாமதுரை பகுதிகளில் தை அமாவாசை நாளான இன்று ஏராளமானோர் தங்களது குடும்பத்தில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பண பூஜை வழிபாடு நடத்தி கோயில்களில் சுவாமி தரிசனம் செய்தனர். 
ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் வரும் அமாவாசை தினம் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு புனிதமும் மிகச் சிறப்பு வாய்ந்த நாளாகவும் கருதப்படுகிறது. தை மாத அமாவாசை நாளன்று தாய் தந்தையரை இழந்தவர்கள் மற்றும் தங்களது குடும்பத்தில் மறைந்த முன்னோர்களின் ஆசி கிடைக்க தர்ப்பண பூஜை நடத்தி விரதம் கடைபிடிப்பது என்பது வழக்கமான ஒன்றாகும். 
அதன்படி காசிக்கு நிகராக கருதப்படும் திருப்புவனம் வைகை ஆற்றங்கரையில் தை அமாவாசை தினத்தை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பண பூஜை நடத்த சிவகங்கை, மதுரை மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமானோர் குவிந்தனர். இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. அதன் பின்னர் இவர்கள் வைகை ஆற்றில் நீராடி தங்களது குடும்பத்தில் மறைந்த முன்னோர்களுக்கு எள்ளும் தண்ணீரும் இறைத்து தர்ப்பண பூஜை நடத்தி வழிபட்டனர். 

அதன்பின் அவர்கள் இங்குள்ள புஷ்பவனேஸ்வரர் சுவாமி கோயிலுக்குச் சென்று நெய் தீபம் ஏற்றி சுவாமி தரிசனம் செய்து வீடு திரும்பினர். மானாமதுரை புரட்சியார் பேட்டை பகுதியில் அமைந்துள்ள தியாக விநோதப் பெருமாள் கோயிலுக்கு ஏராளமானோர் வந்து முன்னோர்களுக்கு எள்ளும் தண்ணீரும் இறைத்து தர்ப்பண பூஜை செய்தனர். அதன் பின் தியாக வினோத பெருமாளை தரிசனம் செய்தனர். 
மானாமதுரை வைகை ஆற்றங்கரையில் ஏராளமானோர் கூடி புனித நீராடி முன்னோர்களுக்கு எள்ளும் தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் செய்தனர். அதன் பின் இவர்கள் ஆனந்தவல்லி சோமநாதர் சுவாமி கோயிலில் விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தனர். மானாமதுரை அருகே உள்ள இளையான்குடி ஒன்றியம் குறிச்சி ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பண பூஜை வழிபாடு நடத்தப்பட்டது. 
இதையொட்டி காசிவிஸ்வநாதர் சன்னதி முன்னர் யாகம் வளர்த்து மூலவர் காசி விஸ்வநாதருக்கு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தன. அதைத் தொடர்ந்து ஏராளமானோர் கோயிலுக்கு வந்து  முன்னோர்களுக்கு எள்ளும் தண்ணீரும் இறைத்து தர்ப்பண பூஜை நடத்தினர். அதைத்தொடர்ந்து இவர்கள காசிவிஸ்வநாதர் சன்னதியில் மூலவருக்கு கங்கை தீர்த்தம் இட்டு சாமி தரிசனம் செய்தனர். கோயிலில் தர்ப்பண பூஜைக்கான பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் டிரஸ்டி எஸ். பி.தேவர் செய்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com