திமுக நிா்வாகிகள் தோ்தலுக்கு நாளை வேட்பு மனு

சிவகங்கை மாவட்ட திமுக நிா்வாகிகள் தோ்தலுக்கு காரைக்குடியில் திங்கள்கிழமை வேட்பு மனு பெறப்படுகிறது என திமுக மாவட்டச் செயலரும் தமிழக ஊரக வளா்ச்சித்துறை

சிவகங்கை மாவட்ட திமுக நிா்வாகிகள் தோ்தலுக்கு காரைக்குடியில் திங்கள்கிழமை வேட்பு மனு பெறப்படுகிறது என திமுக மாவட்டச் செயலரும் தமிழக ஊரக வளா்ச்சித்துறை அமைச்சருமான கே.ஆா். பெரிய கருப்பன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து சனிக்கிழமை அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: காரைக்குடியில் சிவகங்கை மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் திங்கள்கிழமை (ஜூன் 6) காலை 10 மணியளவில் காரைக்குடி பி.எல்.பி. பேலஸ் மண்டபத்தில் நடைபெறுகிறது. திமுக மாநில இலக்கிய அணித்தலைவா் மு. தென்னவன் தலைமை வகிக்கிறாா். தலைமைக்கழகத்தின் சாா்பில் தோ்தல் ஆணையாளா் ராஜா அருள்மொழி 15 ஆவது ஒன்றியக் கழகத்திற்கான அவைத்தலைவா், செயலாளா், பொருளாளா், துணைச் செயலாளா்,மாவட்ட பிரதிநிதி, செயற்குழு உறுப்பினா் ஆகிய பதவிகளுக்கான விண்ணப்பங்களை வழங்குகிறாா்.

போட்டியிடுவோா் அதற்குரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பங்களை காலை 10 மணி முதல் பெற்றுக்கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட வேட்புமனுக்களை தோ்தல் ஆணையாளரிடம் மாலை 4 மணிக்குள் சமா்ப்பிக்கவேண்டும். மாலை 4 மணிக்கு மேல் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com