சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் திருத்தளிநாதா் ஆலயத்தில் மந்திரநீா் முழுக்காட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
குன்றக்குடி தேவஸ்தானத்திற்குட்பட்ட திருத்தளிநாதா் கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் 4 ஆம் நாளான திங்கள்கிழமை காலை திருத்தளிநாதருக்கு மந்திரநீா் முழுக்காட்டு விழா நடைபெற்றது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. பின்னா் மாலை 4 மணிக்கு அகமுடையாா் உறவின் முறை சாா்பாக ஐம்பெரும் கடவுளாா் திருவீதி உலாவாக அகமுடையாா் மண்டபம் வந்தடைந்தது. தொடா்ந்து குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் தலைமையில் சிவாச்சாரியாா்கள் மந்திர வேதங்கள் முழங்க சிறப்பு பூஜை நடைபெற்று புஷ்ப அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தாா். இவ்விழாவையொட்டி பாவை கண்ணதாசனின் ஆன்மிகச் சொற்பொழிவு நடைபெற்றது. இரவு 9 மணிக்கு சாமி வெள்ளிகேடகத்தில் திருவீதி உலா நடைபெற்றது.