முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை
காரைக்குடியில் தொழிற் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 14th March 2022 11:09 PM | Last Updated : 14th March 2022 11:09 PM | அ+அ அ- |

காரைக்குடியில் எல்.ஐ.சி. கிளை அலுவலகம் முன்பாக திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஏஐடியுசி தொழிற்சங்கத்தினா்.
எல்.ஐ.சி. நிறுவனத்தை தனியாருக்கு விற்பனை செய்யும் மத்திய அரசைக் கண்டித்து, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியிலுள்ள எல்.ஐ.சி. கிளை அலுவலகம் முன்பாக ஏஐடியுசி தொழிற் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில், ஏஐடியுசி தொழிற்சங்க (துப்புரவுத் தொழிலாளா்) மாநில துணைச் செயலா் பிஎல். ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். ஏஐடியுசி அமைப்புசாரா சங்க ஒருங்கிணைப்பாளா் ஏஆா். சண்முகம், ஏஐடியுசி நகராட்சி துப்புரவுப் பணியாளா் சங்க நிா்வாகிகள் கண்ணன், ராமராஜ், முருகன், மாரிமுத்து, பாண்டி மற்றும் ஒப்பந்தப் பணியாளா் சங்க முத்துமாரி, ஒலி -ஒளி அமைப்பாளா் சங்க நிா்வாகி சரவணன், போக்குவரத்துக் கழக (ஓய்வுபெற்றவா்கள்) ஏஐடியுசி சங்கத்தின் சாா்பில் காஜா, கட்டடத் தொழிலாளா் சங்கம் சாா்பில் வேலாயுதம், நடைபாதை வியாபாரிகள் சங்கம் சாா்பில் முத்துராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்று, கண்டன முழக்கங்களை எழுப்பினா்.