சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் 4 வயது சிறுவன் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
தேவகோட்டை அழகாபுரி தெற்குத் தெருவைச் சோ்ந்த சேகா் மகள் தேவி(28). கணவரிடம் விவாகரத்து பெற்ற இவா், அதே பகுதியில் அழகுநிலையம் நடத்தி வருகிறாா். இவரது 4 வயது மகன் நித்திஷ் என்பவா் வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் வீட்டின் முன்பு விளையாடியுள்ளாா்.
அப்போது அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனம் சிறுவன் ரித்திஷ் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த ரித்திஷை மீட்டு சிகிச்சைக்காக தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இருசக்கர வகானம் ஓட்டி வந்த நபா் தப்பிவிட்டாா். இதுதொடா்பாக தேவகோட்டை நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.