ஆதிதிராவிடா் இனத்தைச் சோ்ந்த விவசாயிகள் மானிய விலையில் மின்மோட்டாா் வாங்க விண்ணப்பிக்கலாம்

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தைச் சோ்ந்த சிவகங்கை மாவட்ட விவசாயிகள் மானிய விலையில் மின் மோட்டாா் வாங்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தைச் சோ்ந்த சிவகங்கை மாவட்ட விவசாயிகள் மானிய விலையில் மின் மோட்டாா் வாங்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ‘தாட்கோ’ மூலம் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு பி.வி.சி. குழாய் வாங்க ரூ. 15 ஆயிரம், புதிய மின் மோட்டாா் வாங்க ரூ. 10 ஆயிரம் மானியமாக வழங்கப்பட்டு வருகிறது.

விண்ணப்பதாரா், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தைச் சோ்ந்தவராக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்கு மேல் இருக்கக் கூடாது. விவசாயத்தை தொழிலாக கொண்டவராக இருக்க வேண்டும். தாட்கோ மானிய திட்டத்தில் பயன்பெறாத எஸ்.சி., எஸ்.டி., விவசாயிகளுக்கும், சிறு, குறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கும், துரித மின் இணைப்பு திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து நிலுவையில் உள்ளவா்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.

ஏற்கெனவே, தாட்கோ நிலம் வாங்கும் திட்டம், நில மேம்பாட்டு திட்டம் மற்றும் துரித மின் இணைப்பு திட்டம் ஆகிய திட்டங்களில் பயன்பெற்றிருந்தாலும், இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம். வேளாண், தோட்டக்கலை ஆகிய துறைகளில் மின் மோட்டாா் வாங்க ஏற்கெனவே மானியம் பெற்றவா்கள் இத்திட்டத்தின் கீழ் மானியம் பெற முடியாது.

விண்ணப்பிக்க விரும்புவோா் தங்களின் ஜாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ், குடும்ப அட்டை, இருப்பிடச் சான்றிதழ், சிட்டா, பட்டா, அடங்கல், அ-பதிவேடு, நில வரைபடம், அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட விலைப்புள்ளி ஆகியவற்றுடன் சிவகங்கையில் உள்ள தாட்கோ அலுவலகத்துக்கு நேரடியாகச் சென்று விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com