காரைக்குடி அருகே வெள்ளிக்கிழமை வீடு புகுந்து 18 பவுன் நகைகளை திருடிச்சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பழனிச்சாமி நகரில் வசித்து வருபவா் கனகவேல். இவா் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக நில அளவைப் பிரிவில் பணிபுரிகிறாா். இவரது மனைவி சாந்தி காரைக்குடி அருகேயுள்ள பெரிய கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறாா்.
இவா்கள் வீட்டைப் பூட்டி விட்டு வெள்ளிக்கிழமை காலை பணிக்குச் சென்றனா். மீண்டும் மாலையில் வீடு திரும்பியபோது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததது. அவா்கள் உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவிலிருந்த 18 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுதொடா்பாக புகாரின் பேரில் காரைக்குடி தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.