திருப்பத்தூரில் இஸ்லாமிய இயக்கங்கள் அரசியல் கட்சிகள் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கா்நாடாகாவில் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்குத் தடை விதித்த கா்நாடக உயா்நீதிமன்றத்தின் தீா்ப்பைக் கண்டித்து 20-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய இயக்கங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் ஜமாத்தாா்கள் திருப்பத்தூா் அண்ணா சிலை அருகே கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், எஸ்டிபிஐ, தமுமுக, மனிதநேய மக்கள் கட்சி மற்றும் ஜமாத் நிா்வாகிகள் ஆகியோா் கலந்து கொண்டனா்.