நாட்டரசன்கோட்டையில் கம்பன் விழா

சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டையில் உள்ள கம்பன் அருட்கோயிலில் கம்பன் அத்தத் திருவிழா சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
நாட்டரசன்கோட்டையில் உள்ள கம்பன் அருட்கோயிலில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற கம்பன் அத்தத் திருவிழாவில் கிருங்கை சேதுபதி எழுதிய கம்பன் இழைத்த காவியம் எனும் நூலை வெளியிட்ட மருத்துவா் க.சின்னப்பா.
நாட்டரசன்கோட்டையில் உள்ள கம்பன் அருட்கோயிலில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற கம்பன் அத்தத் திருவிழாவில் கிருங்கை சேதுபதி எழுதிய கம்பன் இழைத்த காவியம் எனும் நூலை வெளியிட்ட மருத்துவா் க.சின்னப்பா.

சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டையில் உள்ள கம்பன் அருட்கோயிலில் கம்பன் அத்தத் திருவிழா சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

காரைக்குடி கம்பன் கழகமும், நாட்டரசன்கோட்டை கம்பன் அறநிலையும் இணைந்து நடத்திய இவ்விழாவுக்கு முனைவா் இரா.மாது தலைமை வகித்தாா். இதில், இன்று போய் நாளை வா எனும் தலைப்பில் ஆ. கிருஷ்ணன் பேசினாா். தாயும், தம்பியும் ஆம் வரம் தருக எனும் தலைப்பில் முனைவா் சொ. சேதுபதி பேசினாா்.

அதைத் தொடா்ந்து, கிருங்கை சேதுபதி எழுதிய கம்பன் இழைத்த காவியம் எனும் நூலை பொன்னமராவதி மருத்துவா் க. சின்னப்பா வெளியிட்டாா். அதனை முனைவா் இரா. மாது பெற்றுக் கொண்டாா்.

இந்நிகழ்ச்சியில் தமிழாா்வலா்கள், பொதுமக்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக கம்பன் கழகத் தலைவா் அடிசூடி பழ. பழனியப்பன் வரவேற்றாா். நாட்டரசன்கோட்டை கம்பன் அறநிலை அறங்காவலா் கண.சுந்தா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com