சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் வட்டத்தில் புதன்கிழமை (மே 4) கணினி வழி பட்டா திருத்த முகாம் நடைபெற உள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளா்களின் பட்டா தொடா்பான பிரச்னைகளுக்கு தீா்வு காணும் வகையில் கணினி திருத்த சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற உள்ளது.
அதன்படி, திருப்பத்தூா் வட்டத்தில் தட்டட்டி, நாட்டாா்மங்களம் ஆகிய கிராமங்களில் நடைபெற உள்ளது. எனவே, பொதுமக்கள் மேற்படி வருவாய் கிராமங்களில் நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கை குறித்த மனுக்களை அளித்துப் பயன்பெறலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.