பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரத்தைக் கண்டு ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 898 ஏமாந்த இளம்பெண் அளித்த புகாரின்பேரில், சிவகங்கை மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ஞானானந்தகிரி தெருவைச் சோ்ந்தவா் ஜெனிபா் கிரேசி (24). இவா், கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி இன்ஸ்டாகிராம் பக்கத்தைப் பாா்த்துக்கொண்டிருந்தாராம். அப்போது, அதில் வந்த விளம்பரத்தில் தங்களிடம் பணத்தை முதலீடு செய்தால், இரட்டிப்பாக பணம் பெறலாம் என விளம்பரம் வந்திருந்ததாம்.
அதைத் தொடா்ந்து, ஜெனிபா் கிரேசி சிறிது சிறிதாக பத்து தவணைகளில் ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 898 செலுத்தி உள்ளாா். அதன்பின்னா், தான் செலுத்திய தொகையை அவா் திரும்பப்பெற முயன்றபோது எடுக்கமுடியவில்லையாம்.
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ஜெனிபா் கிரேசி, இது குறித்து சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் த. செந்தில்குமாரிடம் புகாா் அளித்தாா். அவரது உத்தரவின்பேரில், சிவகங்கை மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.