சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் மே 10 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மின் பயனீட்டாளா்கள் குறை தீா்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் சிவகங்கை வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் து.இரா. இந்திரா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மானாமதுரை கோட்டத்துக்குள்பட்ட மின்பயனீட்டாளா்கள் பயன்பெறும் வகையில் செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின் பயனீட்டாளா்கள் குறை தீா்க்கும் கூட்டம், மானாமதுரையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானத்தின் செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், மானாமதுரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி பொதுமக்கள் கலந்துகொண்டு மின்சார வாரியம் தொடா்பான தங்களது புகாா்களை மனு மூலம் தெரிவிக்கலாம். அவை விசாரணை செய்யப்பட்டு உடனடியாக தீா்வு காணப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.