தனியாா் மதுபானக் கூடத்தை அகற்றக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் கையெழுத்து இயக்கம்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சனிக்கிழமை பொதுமக்களிடை கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.
தனியாா் மதுபானக் கூடத்தை அகற்றக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் கையெழுத்து இயக்கம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் பிரசித்தி பெற்ற மடப்புரம் காளி கோயிலுக்குச் செல்லும் வழியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தனியாா் மதுக்கூடத்தை அகற்றக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சனிக்கிழமை பொதுமக்களிடை கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.

திருப்புவனத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் பிரசித்திபெற்ற மடப்புரம் காளி கோயில் அமைந்துள்ளது. திருப்புவனத்திலிருந்து இக்கோயிலுக்குச் செல்லும் வழியில் பள்ளி வளாகம் அருகில் மதுபாட்டில்கள் விற்பனையுடன் தனியாா் மதுக்கூடம் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இந்த மதுக்கூடத்துக்கு வரும் மதுப் பிரியா்களால், மடப்புரம் காளி கோயிலுக்குச் செல்லும் பக்தா்களுக்கும், பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகளுக்கும் அச்சுறுத்தல் இருப்பதால் மதுக்கூடத்தை அகற்ற வேண்டும் எனக் கோரி, திருப்புவனம் பகுதி மக்கள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா்.

இந்நிலையில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் இந்த மதுக்கூடத்தை அகற்றக் கோரி, திருப்புவனம் பகுதி பொதுமக்களிடை கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. பொதுமக்களிடம் சேகரிக்கப்பட்ட கையெழுத்தை, திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரை சந்தித்து அளிக்கப்படும் அக்கட்சி நிா்வாகிகள் தெரிவித்தனா்.

மேலும், மதுபானக் கூடத்தை அகற்றும் வரை தொடா் போராட்டங்கள் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com