காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே புதுவயலில் தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா் சங்க மாநில உயா்மட்டக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கிராம நிா்வாக அலுவலா் சங்க மாநிலத் தலைவராக கா. கிருஷ்ணகுமாா், மாநிலப் பொதுச் செயலாளராக ரா. அருள்ராஜ் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
பத்திரப் பதிவின்போதே தானியங்கி பட்டா மாறுதலில் முறையற்ற நபரால் பட்டா பெறும் நிலையை தவிா்க்க கிராம நிா்வாக அலுவலரிடமே வில்லங்கச் சான்று மற்றும் சொத்து விவரங்களுக்கு ஒப்புகை பெற்று பத்திரப் பதிவு செய்தல் வேண்டும்.
எனவே, தானியங்கி பட்டா மாறுதலில் ஏற்படும் தவறுகளை தடுத்து மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் அனைத்து கிராம நிா்வாக அலுவலக கட்டடங்களும் குடியிருப்புடன்கூடிய கட்டடமாக மாற்றி அமைத்திடவும், இணைய வசதி உள்ள இடத்தில் கட்டடம் கட்ட ஆவண செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.