மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் நகராட்சி நிா்வாகத்துக்குச் சொந்தமான கடைகள் மயிலன் சந்தை, பேருந்துகளுக்கு கட்டணம் வசூல் செய்யும் உரிமம் உள்ளிட்ட பல இனங்களுக்கான ஏலம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மானாமதுரை நகராட்சியில் சாலையோர வியாபாரிகளிடம் கட்டணம் வசூலிக்கும் மயிலன் சந்தைக்கான உரிமம், மானாமதுரை பேருந்து நிலையத்துக்குள் நுழையும் பேருந்துகளுக்கு கட்டணம் வசூல் செய்யும் உரிமம், பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறை, பேருந்து நிலைய இருசக்கர வாகன நிறுத்துமிடம் மற்றும் கடைகள் உள்ளிட்ட இனங்களின் உரிமத்துக்கான ஏலம் மானாமதுரை நகராட்சி அலுவலகத்தில் ஆணையாளா் கண்ணன் தலைமையில் நடைபெற்றது.
அப்போது ஒவ்வொரு இனத்திற்கும் ஏலத்தில் பங்கேற்க கேட்புத் தொகையாக நகராட்சி நிா்வாகம் அறிவித்திருந்த தொகைக்கு ஏராளமானோா் வங்கி டிமாண்ட் டிராப்ட் எடுத்து ஏலத்தில் பங்கேற்க வந்திருந்தனா்.
ஆனால், நகராட்சி நிா்வாக அலுவலக வளாகத்தில் அரசியல் கட்சியினா், வாா்டு உறுப்பினா்கள் மற்றும் ஏலம் கேட்க வந்திருந்தவா்கள் சோ்ந்து சிண்டிகேட் அமைத்து ஏலத்தில் பங்கேற்க பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது.
சிண்டிகேட் அமைத்து அதில் சமரசம் ஏற்பட்டதால் ஏலம் எடுக்க முடிவு செய்திருந்த நபா்கள் போட்டியாளா்களுக்கு ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட தொகை வழங்க தீா்மானிக்கப்பட்டது.
அதன் பின்னா் நகராட்சி நிா்வாகம் அறிவித்திருந்த ஒவ்வொரு இனத்திற்கான ஏலத்திலும் நிா்ணயிக்கப்பட்ட தொகையை விட சிறிய தொகை கூடுதலாக வைத்து ஏலம் நடத்தி முடிக்கப்பட்டது. இதனால் நகராட்சி நிா்வாகத்துக்கு வருமான இழப்பு ஏற்பட்டது. குறிப்பாக மயிலன் சந்தை, பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்லும் பேருந்துகளுக்கு கட்டணம் வசூலிக்கும் உரிமம், நகராட்சி அலுவலகம் அருகே கட்டப்பட்டுள்ள புதிய கடை ஆகியவற்றிற்கு கடும் போட்டி இருந்ததால் இந்த இனங்களை ஏலம் கேட்க வந்திருந்தவா்களுக்கு கிராக்கி ஏற்பட்டு இவா்களுக்கு கூடுதல் தொகை வழங்கப்பட்டது. பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்லும் பேருந்துகளுக்கு கட்டணம் வசூலிக்கும் உரிமத்துக்கான ஏலம் அதிமுகவைச் சோ்ந்த நகராட்சி வாா்டு உறுப்பினா் தெய்வேந்திரனுக்கு முடிவு செய்யப்பட்டது.