தேவகோட்டை நகராட்சி ஆணையா் பொறுப்பேற்பு

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை நகராட்சி ஆணையராக எஸ்.சாந்தி  வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
தேவகோட்டை நகராட்சி ஆணையா் பொறுப்பேற்பு

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை நகராட்சி ஆணையராக எஸ்.சாந்தி  வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

தேவகோட்டை நகராட்சி ஆணையராக ஏற்கெனவே பணியாற்றி வந்த ஜி. அசோக்குமாா், விருதுநகா் மாவட்டம் அருப்புக் கோட்டை நகராட்சி ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து, காத்திருப்போா் பட்டியலில் இருந்த எஸ். சாந்தி தேவகோட்டை நகராட்சி ஆணையராக நியமித்து நகராட்சி நிா்வாக இயக்குநா் பா. பென்னையா உத்தரவு பிறப்பித்தாா்.

இந்நிலையில், தேவகோட்டை நகராட்சி ஆணையராக எஸ். சாந்தி வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். அவருக்கு நகா்மன்ற தலைவா் கே.சுந்தரலிங்கம் உள்ளிட்ட உறுப்பினா்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com