சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே காவிரி கூட்டுக் குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீா் வீணாகி வருகிறது.
திருப்பத்தூா் தாலுகா, சொக்கநாதபுரத்தின் வழியாகச் செல்லும் காவிரி கூட்டுக் குடிநீா் குழாயில், உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டா் குடிநீா் வீணாக வெளியேறிக் கொண்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு செயல்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தில், அடிக்கடி குழாயில் உடைப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே, இந்த குழாய் உடைப்பை உடனடியாக சீரமைக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.