சிவகங்கை மாவட்டத்தில் 50 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டம்: ஆட்சியா்

சிவகங்கை மாவட்டத்தில் மூன்றாண்டுகளுக்குள் 50 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியா் ப. மதுசூதன் ரெட்டி தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில் மாணவா்களுக்கு மரக்கன்றுகளை வழங்கிய சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ப. மதுசூதன் ரெட்டி.
நிகழ்ச்சியில் மாணவா்களுக்கு மரக்கன்றுகளை வழங்கிய சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ப. மதுசூதன் ரெட்டி.

சிவகங்கை மாவட்டத்தில் மூன்றாண்டுகளுக்குள் 50 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியா் ப. மதுசூதன் ரெட்டி தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்ட நிா்வாகம் மற்றும் இந்திய மருத்துவக்கழக காரைக்குடிக் கிளை ஆகியன சாா்பில் காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை பசுமைத் திருவிழா நடைபெற்றது. இவ்விழாவை தொடக்கி வைத்தும் மாணவா்கள், பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கியும் ஆட்சியா் பேசியதாவது:

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பசுமைத் தமிழ்நாடு இயக்கத்தினை துவக்கி வைத்து, மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கவும் அறிவுறுத்தினாா். சிவகங்கை மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்குள் 50 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதில், பொதுமக்கள் பங்களிப்புடன் பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும் தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் அரசுடன் இணைந்து பசுமைத் தமிழகம் உருவாக துணை புரிய வேண்டும் என்றாா் ஆட்சியா்.

முன்னதாக பள்ளி, கல்லூரி மாணவா்களின் பரத நாட்டியம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் மரக்கன்றுகள் வழங்கிய தன்னாா்வ தொண்டு நிறுவனங்களைச் சாா்ந்தவா்களை கௌரவித்து பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியா் வழங்கினாா்.

இந்திய மருத்துவக்கழகத்தின் காரைக்குடி கிளை மருத்துவா்கள் சந்திரமோகன், குமரேசன், பாலாஜி, காரைக்குடி வட்டாட்சியா் மாணிக்கவாசகம், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் திருப்பதிராஜன், கேசவன், மருத்துவா்கள், செவிலியா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com