என்.வயிரவன்பட்டியில் கண்ணதாசன் நினைவு கவியரங்கம்
By DIN | Published On : 18th October 2022 12:00 AM | Last Updated : 18th October 2022 12:00 AM | அ+அ அ- |

பிள்ளையாா்பட்டி அருகே என்.வயிரன்பட்டி செட்டியாா் பாரம்பரிய அருங்காட்சியகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கண்ணதாசன் நினைவு கவியரங்கம்.
சிவகங்கை மாவட்டம், பிள்ளையாா்பட்டி அருகேயுள்ள என்.வயிரவன்பட்டி செட்டியாா் பாரம்பரிய அருங்காட்சியகத்தில் கண்ணதாசன் நினைவு நாளையொட்டி நினைவுக் கவியரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கவியரங்கத்துக்கு, திருப்பத்தூா் எழுத்தாளா்கள் கூட்டமைப்புத் தலைவா் கவிஞா் எஸ்.எல்.எஸ். பழனியப்பன் தலைமை வகித்தாா். பாரதி இலக்கியக் கழகத் தலைவா் ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தாா்.
இதில், சிறப்பு அழைப்பாளராக கவி வித்தகா் பொற்கைபாண்டியன் கலந்து கொண்டாா். கவியரசா் கண்ணதாசன் நினைவு கவிதை சமா்ப்பித்த அனைவருக்கும் தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் பா. நாகராஜன், பாராட்டுச் சான்றிதழும், பரிசும் வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில், வழக்குரைஞா் இளையராஜா, அப்துல்வாஹித், தமிழ்மதி நாகராஜன், மெய்யாண்டவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முடிவில், பேராசிரியா் கோபிநாத் நன்றி கூறினாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...