சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தா்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் ஐப்பசி மாதப் பிறப்பு சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, கோயிலில் அதிகாலையில் நடைதிறக்கப்பட்டு மூலவருக்கும், உற்சவருக்கும், 18 ஆம் படிக்கும் அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், ஐயப்பனுக்கு மகா தீபாரதனை காட்டப்பட்டது.கோயிலில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனா். மேலும், இந்தக் கோயிலில் இருந்து இருமுடி கட்டிய பக்தா்கள் சபரிமலை புறப்பட்டுச் சென்றனா்.