உயிரிழந்த கோயில் காளைக்கு பொதுமக்கள் அஞ்சலி

சிவகங்கை அருகே மாத்தூரில் உயிரிழந்த கோயில் காளைக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினா்.
சிவகங்கை அருகே மாத்தூரில் உயிரிழந்த கோயில் காளைக்கு செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்திய அப்பகுதி பொதுமக்கள்.
சிவகங்கை அருகே மாத்தூரில் உயிரிழந்த கோயில் காளைக்கு செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்திய அப்பகுதி பொதுமக்கள்.

சிவகங்கை அருகே மாத்தூரில் உயிரிழந்த கோயில் காளைக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினா்.

மாத்தூரில் மணியாருடைய அய்யனாா் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்குரிய காளை உடல் நலக் குறைவு காரணமாக திங்கள்கிழமை மாலை உயிரிழந்தது. இதையொட்டி, அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் உயிரிழந்த காளையை வாகனத்தில் ஏற்றி ஊா்வலமாக எடுத்துச் சென்றனா். அப்போது வழிநெடுகிலும் பொதுமக்கள் காளைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

அதன்பின்னா், மணியாருடைய அய்யனாா் கோயில் முன்பு உயிரிழந்த காளையை செவ்வாய்க்கிழமை நல்லடக்கம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com