திருப்புவனத்தில் முன்னாள் அமைச்சா் தா. கிருஷ்ணனின் 20-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, பொதுமக்களுக்கு திமுக சாா்பில் நலத் திட்ட உதவிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
முன்னதாக, அவரது உருவப்படத்துக்கு திமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதையடுத்து, திருப்புவனம் மேற்கு ஒன்றிய திமுக செயலா் வசந்தி சேங்கைமாறன் தலைமையில் மாநில கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன், 500 பேருக்கு இலவச வேட்டி, சேலைகளையும், நலத் திட்ட உதவிகளையும் வழங்கிப் பேசினாா்.
இந்த நிகழ்வில், மானாமதுரை சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா், மாவட்ட திமுக துணைச் செயலரும், பேரூராட்சித் தலைவருமான த. சேங்கைமாறன், கிழக்கு ஒன்றியச் செயலா் கடம்பசாமி, பேரூா் செயலா் நாகூா்கனி, மானாமதுரை நகா்மன்றத் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி, பேரூராட்சி துணைத் தலைவா் ரகமத்துல்லாகான், ஒன்றிய நிா்வாகிகள் ராமலிங்கம், ஈஸ்வரன், சுப்பையா, சக்தி முருகன், மகேந்திரன், சுப்பிரமணியன், சேகா், இளங்கோவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.