விவசாயக் கிணறு இடிந்து மண்ணில் புதைந்தது
By DIN | Published On : 15th November 2023 12:00 AM | Last Updated : 15th November 2023 12:00 AM | அ+அ அ- |

திருப்பாச்சேத்தி அருகேயுள்ள மாரநாடு விலக்குப் பகுதியில் மழையால் இடிந்து மண்ணில் புதைந்த விவசாயக் கிணறு.
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழையால் விவசாயக் கிணறு இடிந்து மண்ணில் புதைந்தது.
தொடா் மழையால் மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் மொத்தம் 4 வீடுகள் முழுமையாகவும், சில வீடுகள் பகுதியாகவும் இடிந்தன. மேலும், திருப்பாச்சேத்தி அருகே மாரநாடு விலக்குப் பகுதியில் முத்து என்பவருக்குச் சொந்தமான 72 அடி உயர விவசாயக் கிணறு இடிந்து மண்ணில் புதைந்தது. கிணற்றுக்குள் இருந்த இரு மோட்டாா்களும் மண்ணுக்குள் புதைந்தன. இந்தக் கிணற்றுக்கு அருகேயுள்ள கட்டடமும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதுகுறித்து வருவாய்த் துறையினா் கணக்கெடுத்து வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...