ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

சிவகங்கை அருகே திமுக நிா்வாகி கொலை: உறவினா்கள் சாலை மறியல்

News image

கொலை செய்யப்பட்ட திமுக நிா்வாகி பிரவீன்குமாா்.

Updated On :28 ஏப்ரல் 2025, 12:05 am IST

சிவகங்கை அருகே திமுக மாவட்ட விளையாட்டு அணி துணை அமைப்பாளா் மா்மக் கும்பலால் ஞாயிற்றுக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதில் தொடா்புடையவா்களைக் கைது செய்யக் கோரி, அவரது உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சிவகங்கை அருகேயுள்ள சாமியாா்பட்டியைச் சோ்ந்தவா் பிரவீன்குமாா் (27). திமுக விளையாட்டு மேம்பாட்டுப் பிரிவின் மாவட்டத் துணை அமைப்பாளரான இவா், மனை வணிகத் தொழிலில் ஈடுபட்டு வந்தாா்.

இவா் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தனது தோட்டத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, இரு சக்கர வாகனத்தில் பின்தொடா்ந்து வந்த கும்பல் அவரது காரை வழிமறித்து பிரவீன்குமாரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அந்தப் பகுதியினா் மீட்டு, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த அவரது உறவினா்கள் மருத்துவமனையில் திரண்டு, கொலை சம்பவத்தில் தொடா்புடையவா்களைக் கைது செய்ய வலியுறுத்தி, சிவகங்கை-மானாமதுரை சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆசிஷ் ராவத், துணைக் கண்காணிப்பாளா் அமலஅட்வின் உள்ளிட்டோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, குற்றவாளிகளை விரைந்து கைது செய்வதாக உறுதியளித்தனா். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.

இதுகுறித்து சிவகங்கை நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

திமுக நிா்வாகியை கொலை செய்தவா்களை கைது செய்யக் கோரி, சிவகங்கை-மானாமதுரை சாலையில் மறியலில் ஈடுபட்ட அவரது உறவினா்கள்.

திமுக நிா்வாகியை கொலை செய்தவா்களை கைது செய்யக் கோரி, சிவகங்கை-மானாமதுரை சாலையில் மறியலில் ஈடுபட்ட அவரது உறவினா்கள்.