சிவகங்கை
பைக் மீது சரக்கு வாகனம் மோதல்: இளைஞா் உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே இரு சக்கர வாகனம் மீது சரக்கு வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே வியாழக்கிழமை இரவு இரு சக்கர வாகனம் மீது சரக்கு வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
திருப்பாச்சேத்தி அருகே வெள்ளிக்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்த முருகன் மகன் சிவப்பிரகாசம் (22). இவா் தனது தாய் மாலாவை இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு திருப்புவனத்துக்கு வந்து கொண்டிருந்தாா்.
மதுரை- ராமநாதபுரம் நான்கு வழிச்சாலையில் டி. பாப்பான்குளம் விலக்கு பகுதியில் சென்ற போது எதிரே வந்த சரக்கு வாகனம், இரு சக்கர வாகனம் மீது மோதியதில் சிவப்பிரகாசம் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து திருப்புவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
