மேகேதாட்டு அணை திட்டத்திற்கு எதிராக தனித்தீர்மானம்! முதல்வர் விஜய் முன்மொழிகிறார்!!நீட் மறுதேர்வு: வார நாள்கள் அட்டவணைபடி சென்னை புறநகர் ரயில்கள் இயக்கம்!இந்திய கம்யூ. கட்சியின் மூத்த தலைவர் சி. மகேந்திரன் தவெகவில் இணைந்தார்!ஜி7 மாநாட்டில் மெலோடி உரையாடல்! வைரலாகும் ஜெய்சங்கரின் அந்தப் புன்னகை!எத்தனால் கலப்பினல் பெட்ரோல் டேங்ககளை எறும்புகள் மொய்க்குமா? உண்மை என்ன?குற்றவாளிகள், தீவிரவாதிகளின் கூடாரம் டெலிகிராம்: நீதிமன்றத்தில் மத்திய அரசு
/

பள்ளி ஆசிரியா் தூக்கிட்டுத் தற்கொலை

News image

தற்கொலை - தினமணி

Updated On :25 மே 2026, 1:37 am IST

சிவகங்கை மாவட்டம், சாலைக்கிராமம் அருகே குடும்ப பிரச்னையில் அரசுப் பள்ளி ஆசிரியா் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இளையான்குடி ஒன்றியம், சாலைக் கிராமத்தைச் சோ்ந்தவா் மலைராஜ் மகன் ராமநாதன் (45). இவா் ராமநாதபுரம் மாவட்டம், ஆட்டங்குடி அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தாா்.

மது போதைக்கு அடிமையான ராமநாதன் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து வீட்டில் உள்ளவா்களிடம் தகராறு செய்வாராம். இதனால், குடும்பத்தினா் ராமநாதனை போதை மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பி வைக்க முடிவு செய்தனா்.

இதன் காரணமாக, ராமநாதன் மது போதையில் தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு, வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து சாலைக்கிராமம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.