ஒட்டன்சத்திரம் அருகே வீட்டின் அருகே நிறுத்தியிருந்த காரை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர்.
அம்பிளிக்கையைச் சேர்ந்தவர் சிவசங்கர் (34). இவர் தனக்கு சொந்தமான காரை தனது வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் நிறுத்தி வைப்பது வழக்கம்.
கடந்த மார்ச் 3 ஆம் தேதி தேதி காலை காரை நிறுத்தி விட்டு வெளியூர் சென்றுவிட்டாராம்.
அதன் பின்னர் மார்ச் 5 ஆம் தேதி திரும்பி வந்து பார்க்கும் போது காரைக் காணவில்லை. இது குறித்து அம்பிளிக்கை காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.