உத்தமபாளையம் கல்லூரி நிறுவனரின் 58 ஆவது நினைவு நாள்

உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரி நிறுவனரின் நினைவு நாள் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரி நிறுவனரின் நினைவு நாள் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

இக்கல்லூரி நிறுவனரான செ. முகம்மது மீரா ராவுத்தரின் 58 ஆவது நினைவு நாளையொட்டி, கல்லூரியின் என்.சி.சி., என்.எஸ்.எஸ். மாணவர்கள் உள்பட அனைத்துத் துறை மாணவர்களின் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் தொடங்கிய இந்த ஊர்வலமானது, கல்லூரிச் சாலை, அம்மாபட்டி விலக்கு, கோம்பை சாலை, கிராமச்சாவடி, கோட்டைமேடு வழியாக பெரிய பள்ளிவாசலில் நிறைவு பெற்றது. பின்னர், அங்குள்ள கல்லூரி நிறுவனரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. அதில், கல்லூரி ஆட்சிக்குழுத் தலைவர் சேக்மைதீன், கல்லூரிச் செயலர் மற்றும் தாளாளர் தர்வேஸ் மைதீன், கல்லூரி முதல்வர் முகமது மீரான் மற்றும் அனைத்துத் துறைப் பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அலுவலர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com