பெரியகுளம் அருகே சில்வார்பட்டியில் குடிநீர் கோரி புதன்கிழமை சாலை மறியல் நடைபெற்றது.
சில்வார்பட்டி ஊராட்சிக்குள்பட்ட தெற்கு காலனியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக குடிநீர் விநியோகம் செய்ய வில்லை. இதையடுத்து இப்பகுதி மக்கள் பலமுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதைத் தொடர்ந்து புதன்கிழமை காலை வைகை அணை சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து அங்கு வந்த ஊராட்சி செயலர் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.