தேனியில் மகன் கொலை: தந்தை கைது

தேனியில் குடும்பப் பிரச்னையில் மகனை கத்தியால் குத்தி கொலை செய்த தந்தையை புதன்கிழமை போலீஸார் கைது செய்தனர்.
Published on
Updated on
1 min read

தேனியில் குடும்பப் பிரச்னையில் மகனை கத்தியால் குத்தி கொலை செய்த தந்தையை புதன்கிழமை போலீஸார் கைது செய்தனர்.
 தேனி, ஆத்தங்கரை தெருவைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் முத்துப்பாண்டி (37). இவரது மனைவி ஜக்கம்மாள். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் ஜக்கம்மாள் கடந்த சில ஆண்டுகளாக கணவரை பிரிந்து குழந்தைகளுடன் தனியே வாழ்ந்து வருகிறார். இதனிடையே முத்துப்பாண்டி, கூலித் தொழிலாளியான அவரது தந்தை முருகனுடன் (58) குடும்பப் பிரச்னை தொடர்பாக அடிக்கடி தகராறு செய்து வந்தாராம். புதன்கிழமை அதிகாலை இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், முத்துப்பாண்டியை, முருகன் கத்தியால் குத்தினார். இதில், முத்துப்பாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தேனி காவல் நிலைய போலீஸார்  முருகனை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com