பேருந்து மோதி இளைஞர் சாவு

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் இளைஞர் புதன்கிழமை உயிரிழந்தார்.
Published on
Updated on
1 min read

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் இளைஞர் புதன்கிழமை உயிரிழந்தார்.
தேனி மாவட்டம், கே.ஜி.பட்டியைச் சேர்ந்தவர் சந்திரன் மகன் குமார் (24). இவர், பொங்கலூர், காட்டுப்பாளையத்தில் வாடகை வீடு எடுத்து தங்கி பல்லடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், குமார் இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை மதியம் வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தார்.  பல்லடம் பனப்பாளையம் பகுதியில் வந்துகொண்டிருந்தபோது, கரூரிலிருந்து கோவை நோக்கி வந்த அரசுப் பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து பல்லடம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com