தேனி மாவட்டத்தில் தொடர் மழை: அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடர் மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது.
Published on
Updated on
1 min read

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடர் மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது.
மாவட்டத்தில் செவ்வாய்கிழமை இரவு சராசரியாக 19.35 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. சோத்துப்பாறை அணை நீர்பிடிப்பில் அதிக அளவாக 98 மி.மீ. மழை பெய்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 9 .19 அடி உயர்ந்து புதன்கிழமை 91.4 அடியாக இருந்தது.
மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் புதன்கிழமை, வைகை அணைக்கு தண்ணீர் வரத்து விநாடிக்கு 347 அடியாக இருந்தது. அணை நீர்மட்டம் 33.50 அடி.  அணையில் தண்ணீர் இருப்பு 526 மில்லியன் கன அடி. அணையில் இருந்து மதுரை, ஆண்டிபட்டி- சேடபட்டி குடிநீர் திட்டங்களுக்கு விநாடிக்கு 40 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மஞ்சளாறு அணை நீர்மட்டம் 45 அடி. அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 258 கன அடி. அணையில் தண்ணீர் இருப்பு 255.57 மில்லியன் கன அடி.
முல்லைப் பெரியாறு அணை நீர்பிடிப்பில் 5.4 மி.மீ.,  தேக்கடியில் 5.8 மி.மீ., மழை பெய்துள்ளது. பெரியாறு அணை நீர்மட்டம் 121.50 அடியாக இருந்தது. அணைக்கு தண்ணீர் வரத்து விநாடிக்கு 1,135 கன அடி. அணையில் தண்ணீர் இருப்பு 2,925 மில்லியன் கன அடி. அணையில் இருந்து  தமிழகப் பகுதிக்கு விநாடிக்கு 218 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com