கம்பம் செல்லாண்டியம்மன் கோயிலைச் சேர்ந்த பாண்டியன் மகன் சேர்மன்சாமி (28). தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். இவர், நண்பருடன் வெள்ளிக்கிழமை சுருளி அருவியில் குளிக்க தனது மோட்டார் சைக்கிளில் வந்தார்.
அருவியில் குளித்து விட்டு திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லையாம். இதுகுறித்து ராயப்பன்பட்டி காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து, மோட்டார் சைக்கிளை திருடியதாக, கம்பம் வனச்சரகர் அலுவலக சாலையைச் சேர்ந்த அய்யர் மகன் கார் ஓட்டுநர் கார்த்திக் (38) என்பவரை சனிக்கிழமை கைது செய்தனர்.