பெரியகுளத்தில் கோயில் விழா ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பெரியகுளம் வனச்சரகத்தினர் புகாரின்பேரில் நடைபெற்ற இக் கூட்டத்துக்கு, பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் ச. ஜெயப்பிரிதா தலைமை வகித்தார். பெரியகுளம் வட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். இதில், பெரியகுளம் பகுதியில் உள்ள அனைத்து சமுதாயத்தினரும் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், கோயில் விழாவின்போது, வனப் பகுதியில் அனுமதியின்றி மூங்கில் உள்ளிட்ட பலவகை மரங்களை வெட்டுவது கூடாது. சாலைகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களில் அணிவகுப்பு நடத்திச் செல்லக்கூடாது என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
இதில், பெரியகுளம் வனச்சரக அலுவலர் சுந்தரேசன், தேவதானப்பட்டி வனச்சரக அலுவலர் சுரேஷ், ஆய்வாளர்கள் சுரேஷ், மதனகலா மற்றும் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.