தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 20-ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.
மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு, தங்களது கோரிக்கைகள் குறித்து மனு அளித்து தீர்வு பெறலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.