மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு

தேனி மாவட்டம், கூடலூரில் மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

தேனி மாவட்டம், கூடலூரில் மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
  கூடலூர் 6 ஆவது வார்டு, புதூர் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் இளங்கோவன் (எ) குவை (50). கூலி வேலை செய்து வந்தார். இவரது மனைவி கமலா (45). இவர்கள் வீட்டில் சிதிலமடைந்த கட்டடத்தில், பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது.
 இந்நிலையில், வெள்ளிக்கிழமை மின்சார இணைப்புப் பெட்டியை பழுது பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக இளங்கோவன் மீது மின்சாரம், பாய்ந்தது. இதில், பலத்த காயமடைந்த அவரை மீட்டு, கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், இளங்கோவன் 
ஏற்கெனவே, இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், கூடலூர் தெற்கு சார்பு ஆய்வாளர் ஜெயபாண்டி வழக்குப்பதிந்து, விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com